Thursday, May 10, 2018

அவசர செயற்குழு கூட்டம் 05/05/2018

விருதுநகர் மாவட்ட சங்கத்தின் அவசர  செயற்குழு கூட்டம் கடந்த 05/05/2018 அன்று சிவகாசியில் நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அக் கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28,29 தேதிகளில் கோவையில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி  மாநிலஅமைப்பு செயலாளர் தோழர் A .சமுத்திரக்கனி அவர்கள் பேசினார் .அதன் பின் மாவட்ட மாநாட்டை வெற்றிகரமாக்க செய்ய வேண்டிய பணிகள் ,மற்றும் ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாடு ,தெருமுனை பிரச்சார இயக்கம் ஆகியவற்றை விளக்கி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேசினார் .இக் கூட்ட முடிவின்படி தெருமுனை பிரச்சாரக்கூட்டங்களை 07/05/2018 அன்று ராஜபாளையத்திலும் ,08/05/2018 அன்று காலைசாத்தூருரிலும் ,08/05/2018 அன்று மாலை அருப்புக்கோட்டை நகரிலும் ,09/05/2018 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் ,10/05/2018 அன்று விருதுநகரிலும் ,11/05/2018 அன்று சிவகாசியிலும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது .மாவட்ட மாநாட்டு நன்கொடை வசூலை வரும் 15/05/2018 அன்றுக்குள் மாவட்ட சங்கத்திடம் கொடுத்துவிடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது .அதே போல் இளம் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பை விருதுநகர் மாவட்டத்தில் நடத்தவேண்டும் என்ற மாநில சங்க முடிவை அமல்படுத்தவேண்டிய அவசியத்தையும் சுட்டி காட்டி உள்ளோம் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...