Wednesday, December 6, 2017

விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும்

விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் சந்திரசேகரன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 05/12/2017 அன்று விருதுநகரில் தோழர் R .ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் L .தங்கதுரை , தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் . அதன் பின் மாவட்ட தலைவர் தலைமையுரை நிகழ்த்தினார் .முறையாக மாவட்ட செயற்குழுவை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் துவக்கி வைத்தார் .வர இருக்கின்ற 2 நாள் வேலைநிறுத்தத்தை விளக்கி மாநில  செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சி மிகு உரை நிகழ்த்தினார் .போராட்டத்தை வாழ்த்தி நமது மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA சங்க மாவட்ட தலைவர் தோழர் நாராயணன்  ஆகியோர் பேசினர் .அதன் பின் கடந்த 30 -11-2017 அன்று பணி ஓய்வு பெற்ற தோழர் சந்திரசேகரன்  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .தோழருக்கு மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சந்தன மாலை அணிவித்து கௌரவித்தார் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார்  சால்வை அணிவித்து பாராட்டினார் .நினைவு பரிசை மாநில  செயலர் வழங்கி சிறப்பித்தார் .தோழரை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் ராமசந்திரன் ,AIDBPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் பேசினர் .பின்னர் நடைபெற்ற NGN NET WORK விசயமாக நடைபெற்ற சேவை கருத்தரங்கை மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் துவக்கி வைத்தார் .மாவட்ட பொது மேலாளர் திருமதி S.E.ராஜம்  மற்றும் துணை பொதுமேலாளர் திரு ராதாகிருஷ்ண அவர்கள் கருத்துரை வழங்கினார்கள் .மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன்  நவின்றார்  
Image may contain: one or more people and indoor
Image may contain: 5 people
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and people sitting

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...